MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!

ரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!

நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கடன் சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

1 Min read
vinoth kumar
Published : Jul 06 2025, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வட்டார போக்குவரத்து அலவலகம்
Image Credit : Google

வட்டார போக்குவரத்து அலவலகம்

நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலவலகத்தில் (ஆர்டிஓ) பணியாற்றி வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார். இவரது மனைவி பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

24
 ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Image Credit : our own

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் அதிகாலை ரயில் முன் பாய்ந்தனர். இதில், இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
இன்னும் 2 நாள் லீவு இருக்கு! குஷியில் பள்ளி கல்லூரி மாணவர்கள்!
Related image2
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களா நீங்கள்! 45 நாட்களில் ரூ.1000! எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு!
34
மகள் பிரச்சனையால் தற்கொலை
Image Credit : stockPhoto

மகள் பிரச்சனையால் தற்கொலை

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர், திருமணம் வேறு ஒருவரை செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.

44
கடன் தொல்லை
Image Credit : our own

கடன் தொல்லை

ஆனால், மகன், மகள் படிப்புக்காக வாங்கிய கடன் சுமை காரணமாக சுப்பிரமணி, மனைவி பிரமிளாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆர்டிஓ மற்றும் ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
காவல் நிலையம்
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved