MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணத்தில் திடீர் திருப்பம்! அவரது மனைவிக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்!

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணத்தில் திடீர் திருப்பம்! அவரது மனைவிக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன், சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையீடு.

1 Min read
vinoth kumar
Published : Oct 10 2025, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சிறையில் இருந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

24
ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன்
Image Credit : our own

ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன்

இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாக அசுவத்தாமன், பொன்னை பாலு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Related image1
வெளியில் வரும் ஏ2 ரவுடி அஸ்வத்தாமன்.! கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் குரூப்! பதற்றத்தில் சென்னை!
Related image2
சென்னையில் அதிர்ச்சி! ஒரே மெசேஜ்! அலறியடித்து வெளியேறிய ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள்!
34
நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்
Image Credit : our own

நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்

இந்நிலையில் நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். நீதிபதி என். சதீஸ்குமார் முன்பு ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் செய்ய வேண்டும் அவரது மனைவியின் அவசர முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

44
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
Image Credit : istock

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

பிரேதப் பரிசோதனைக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொள்வார்கள் என நீதிபதி சதீஷ் குமார் பதில் அளித்துள்ளார். எனினும் நீதிபதி, இதனை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு இன்று விசாரிக்கப்படும் என அறிவுறுத்தினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்
கொலை
குற்றம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved