MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.. இவர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது!

ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.. இவர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது!

தமிழகத்தில் கல்வி ஆண்டு நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் நலன் கருதி மே மாதம் வரை வழங்கப்படும் பணி நீட்டிப்பு மற்றும் ஊதியம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 09 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசு பள்ளி ஆசிரியர்கள்
Image Credit : our own

அரசு பள்ளி ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் சுமார் 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சுமார் 3.12 லட்சம் முதல் 4.5 லட்சம் ஆசிரியர்கள் (இதில் நிரந்தர ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அடங்குவர்). தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது ஏற்படும் ஓய்வு மற்றும் புதிய நியமனங்கள் (TRB மூலம்) காரணமாக இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

25
பள்ளிக்கல்வித்துறை
Image Credit : our own

பள்ளிக்கல்வித்துறை

இந்நிலையில் அரசு பணியில் வேலை பார்த்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ஆண்டுகளான ஆசிரியர்களுக்கு கிடைத்திருந்த மே மாதம் ஊதியம் இனிமேல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது புதிதாக வந்த உத்தரவு அல்ல மூன்று ஆண்டு தாமதத்துக்கு பின் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

Related Articles

Related image1
சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
Related image2
வரிசைக்கட்டி வரும் விடுமுறை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
35
பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள்
Image Credit : our own

பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள்

பொதுவாக கல்வி ஆண்டு நடுவில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெறுகிறார் என்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக அந்த ஆண்டு முடியும் வரை அதாவது மே மாதம் முடியும் வரை பதவி நீட்டிப்பு கொடுப்பது வழக்கம். இதற்கான சம்பளமும் கிடைக்கும். ஆனால் அரசுக்கு பார்த்தால் கூடுதலாக நிதி இழப்பு ஏற்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறையின் தனிக்கை பிரிவு ஒரு அறிக்கையை கொடுத்துள்ளது. அதன்படி பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மே மாதம் நீட்டிப்பு வழங்க வேண்டாமென பரிந்துரைக்கப்பட்டது. இதில், பணி ஓய்வு பெறுவோர், அக்கல்வியாண்டில் தேர்வுப்பணிகள் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு கொடுத்து விட வேண்டும் என்று 2022ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

45
ஆசிரியர்கள் பணி நிறைவு
Image Credit : our own

ஆசிரியர்கள் பணி நிறைவு

இந்த அரசாணை வெளியான பிறகு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அலுவலர்களுக்கு, பிரத்யேக செயல்முறைகள் அனுப்பப்படவில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மே மாத ஊதியத்துடன் தான், மாநிலம் முழுக்க ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுகின்றனர்.

55
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்
Image Credit : our own

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2025, ஜூன் 13ம் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மே மாதம் பணி நீட்டிப்பு செய்ய வேண்டாமென, செயல்முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதியிழப்பை தவிர்க்க கொண்டு வந்த அரசாணை விதிமுறைகளை செயல்படுத்த, மூன்று ஆண்டுகள் கால தாமதமாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது அரசாணையை அமல்படுத்துவதில், ஆசிரியர்களுக்கு நிலவிய சந்தேகங்கள் அடிப்படையில், அரசிடம் விளக்கம் பெற சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 30.5.2025ல் விளக்கம் பெறப்பட்டதால், செயல்முறைகள் சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பப்பட்டன என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆசிரியர்
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
Recommended image2
Puducherry Elections: புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு! NDA, INDIA, தவெக இடையே மும்முனைப் போட்டி!
Recommended image3
அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்.. சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
Related Stories
Recommended image1
சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
Recommended image2
வரிசைக்கட்டி வரும் விடுமுறை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved