MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 'சமாதானத்துக்குலாம் வேலையே இல்ல' நான் சொன்னா சொன்னது தான்! சிறப்பு பொதுக்குழு உறுதி - ராமதாஸ் அதிரடி

'சமாதானத்துக்குலாம் வேலையே இல்ல' நான் சொன்னா சொன்னது தான்! சிறப்பு பொதுக்குழு உறுதி - ராமதாஸ் அதிரடி

பாமக சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Aug 16 2025, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாமக.வில் அதிகார மோதல்
Image Credit : pmk

பாமக.வில் அதிகார மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் புதிய வீரியம் பெற்று வருகிறது. பாமக தலைவரான அன்புமணி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணியின் தலைவர் பதவி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி ராமதாஸ் அனைவரையும் அதிரவிட்டார்.

24
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அன்புமணி
Image Credit : x

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அன்புமணி

மேலும் பாமக.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக் கிழமை இரவு ராமதாஸ்ன் மனைவியும், அன்புமணியின் தயாருமான சரஸ்வதியின் பிறந்த நாள் விழா தைலாபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அன்புமணியும், ராமதாஸ்ம் அருகருகே நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தந்தை, மகன் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்ததாக பாமக.வினர் தெரிவித்து வந்தனர். மேலும் மோதல் முடிவுக்கு வந்ததால் ராமதாஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று சொல்லப்பட்டது.

Related Articles

Related image1
ராமதாஸோடு கைகோர்த்த அன்புமணி.?கொண்டாட்டத்தில் பாமக
Related image2
அன்புமணி சஸ்பெண்ட்..? ராமதாஸின் தெறிக்கவிடும் முடிவு..! அலறித் துடிக்கும் பாமக..!
34
சிறப்பு பொதுக்குழு கூட்டம்
Image Credit : facebook / ramadoss

சிறப்பு பொதுக்குழு கூட்டம்

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

44
பொதுக்குழு ரத்து என்பது வதந்தி
Image Credit : pmk

பொதுக்குழு ரத்து என்பது வதந்தி

பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக் கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved