MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆட்சியில் பங்கு வேண்டும்.. கனிமொழியிடம் நேரடியாக கேட்ட ராகுல் காந்தி.. வெளியான தகவல்!

ஆட்சியில் பங்கு வேண்டும்.. கனிமொழியிடம் நேரடியாக கேட்ட ராகுல் காந்தி.. வெளியான தகவல்!

சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தர வேண்டும். கூடுதல் சீட் தர வேன்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. ராகுல் காந்தி இதை கனிமொழியிடமும் கூறியதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன

1 Min read
Author : Rayar r
Published : Jan 30 2026, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திமுக, காங்கிரஸ் மோதல் இல்லை
Image Credit : x

திமுக, காங்கிரஸ் மோதல் இல்லை

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ''ராகுல் காந்தியுடன் சந்திப்பு சுமூகமாக நடந்தது. காங்கிரசுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறோம். எந்த மோதல் போக்கும் இல்லை திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அது யார் என்பதை முதல்வர் தெரிவிப்பார்'' என்றார்.

23
கனிமொழி, ராகுல் காந்தி பேசியது என்ன?
Image Credit : Asianet News

கனிமொழி, ராகுல் காந்தி பேசியது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி செயல்திட்டம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் டெல்லியில் சந்தித்தனர். இவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

ஆனால் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் அமைத்த தலைவர்கள் குழுவுடன் விஷயங்களை விவாதித்து இறுதி செய்யுமாறு கனிமொழியை ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்த சந்திப்பு சுமுகமாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவித்தது.

Related Articles

Related image1
விஜய்-காங்கிரஸ் எம்.பி.க்கள் பிளானுக்கு எண்ட் கார்டு போட்ட கனிமொழி.. ராகுலுடன் முக்கிய ஆலோசனை
Related image2
திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!
33
ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டாரா ராகுல் காந்தி?
Image Credit : Asianet News

ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டாரா ராகுல் காந்தி?

சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தர வேண்டும். கூடுதல் சீட் தர வேன்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. ராகுல் காந்தி இதை கனிமொழியிடமும் கூறியதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஆட்சியில் பங்கு தர முடியாது என கனிமொழி திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக மீது காங்கிரஸ் பொறுப்பாளர் அதிருப்தி

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காததால், திமுகவின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்.

நாங்கள் நவம்பரில் ஒரு கூட்டணிக் குழுவை அமைத்தோம். டிசம்பர் 15-க்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து, கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஏன் இந்தத் தாமதம் என்று தெரியவில்லை. அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கனிமொழி
இந்திய தேசிய காங்கிரஸ்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்ன ஆட்சி நடத்துறீங்க.. நான்கரை ஆண்டுகளில் 7500 படுகொலைகள்.. ஆளுங்கட்சியை அலறவிடும் பாமக!
Recommended image2
Now Playing
எடப்பாடி பழனிச்சாமிக்கு ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து பேச தகுதி இல்லை ! வைகோ பேட்டி
Recommended image3
சமையல் செய்யும் போது பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. அலறிய கிராமம்.. மூன்று பேரின் நிலைமை என்ன?
Related Stories
Recommended image1
விஜய்-காங்கிரஸ் எம்.பி.க்கள் பிளானுக்கு எண்ட் கார்டு போட்ட கனிமொழி.. ராகுலுடன் முக்கிய ஆலோசனை
Recommended image2
திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved