MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!

தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

2 Min read
Author : Rayar r
Published : Jan 06 2026, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு
Image Credit : Asianet News

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விடாது என்று கூறிய நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக அரசு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

24
சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி
Image Credit : our own

சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி

ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளிய திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, ''திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கருத்துகளையும் எடுத்து வாதாடியுள்ளது.

சுடுகாட்டில் தான் பிணங்களை எரிப்பார்கள்

ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்கும். சுடுகாடு இருக்கிறது என்றால் கிராமங்களில் அந்த இடத்தில் தான் பிணங்களை எரிப்பார்கள். அதற்கு பதிலாக வேறு எந்த இடத்திலும் எரிக்க மாட்டார்கள். அதெல்லாம் பழக்கவழக்கங்கள் தான். ஆகவே அந்த பழக்கவழக்கங்களை மாற்றாதீர்கள். 

இதுவரை தீபம் ஏற்றப்படாத இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக்கூறி ஏன் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள் என்பது தான் எங்களின் கேள்வி. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது'' என்று கூறியுள்ளார்.

Related Articles

Related image1
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு மரண அடி.! நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு! ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்!
Related image2
இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு.. கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்றணும்.. மத்திய அரசு அதிரடி!
34
அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்
Image Credit : x

அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

புனிதமான தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்து அமைப்புகள், பல்வேறு அரசியல்வாதிகள் 'அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பார்கள்' என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து விரோத திமுக அரசு

இது குறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

44
நாவடக்கம் தேவை
Image Credit : Asianet News

நாவடக்கம் தேவை

நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பரங்குன்றம்
தமிழ்நாடு
திமுக
அண்ணாமலை பாஜக

Latest Videos
Recommended Stories
Recommended image1
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சிடுங்க! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை
Recommended image2
தவெகவில் கொத்துக் கொத்தாய் இணையும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கூடாரமும் அலறல்..! கலக்கத்தில் ஸ்டாலின் -இபிஎஸ்
Recommended image3
Now Playing
அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
Related Stories
Recommended image1
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு மரண அடி.! நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு! ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்!
Recommended image2
இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு.. கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்றணும்.. மத்திய அரசு அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved