MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு மரண அடி.! நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு! ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்!

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு மரண அடி.! நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு! ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வரலாற்று ஆதாரங்கள் குறித்த இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 06 2026, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருப்பரங்குன்றம்
Image Credit : Asianet News

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசு, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட 26 மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அனைத்து மனுக்களும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

24
தமிழக அரசு வாதம்
Image Credit : Asianet News

தமிழக அரசு வாதம்

அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் இருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்தவித ஆவணங்களும், வரலாற்று ஆதாரங்களும் இல்லை. 1920-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்த போது, மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

Related Articles

Related image1
குளிருக்கு பிரேக்.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! ரவுண்ட் கட்டி அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Related image2
நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை.. குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
34
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Image Credit : our own

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அதேநேரம் 1961ம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகத்தில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கான ஆவணத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

44
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Image Credit : Asianet News

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அதில், தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது செல்லும். ஒவ்வொரு கார்த்திகையிலும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது. தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல்துறை, தொல்லியல் துறை தேவஸ்தானம் முடிவு செய்யலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நீதிமன்றம்
தமிழ்நாடு
திருப்பரங்குன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குளிருக்கு பிரேக்.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! ரவுண்ட் கட்டி அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Recommended image2
அமெரிக்காவை கண்டித்து போராட்டம்.. பாடகர் கோவனை வெச்சு செய்யும் தவெகவினர்.. அட இதான் விஷயமா!
Recommended image3
அமைச்சர்களின் குடுமியை பிடித்து ஆட்டும் இபிஎஸ்..! ஆளுநரிடம் முறையிட திட்டம்
Related Stories
Recommended image1
குளிருக்கு பிரேக்.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! ரவுண்ட் கட்டி அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Recommended image2
நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை.. குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved