- Home
- Tamil Nadu News
- சனிக்கிழமை வார விடுமுறை அதுவுமா சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை..! எத்தனை மணிநேரம் தெரியுமா?
சனிக்கிழமை வார விடுமுறை அதுவுமா சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை..! எத்தனை மணிநேரம் தெரியுமா?
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, சென்னை குன்றத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த காலம் போய் தற்போது சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை. இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சனிக்கிழமை சென்னை முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
குன்றத்தூர்
திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர், கோவில் அலை குன்றத்தூர், போலீஸ் குவார்ட்டர்ஸ், சரண்யா நகர், ஏஆர் எடைப்பாலம், சர்மா நகர், மேத்தா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

