MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tiruchengode: திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது சோகம்! தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு! என்ன நடந்தது?

Tiruchengode: திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது சோகம்! தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு! என்ன நடந்தது?

Tiruchengode Temple Car: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 31 2026, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது சோகம்
Image Credit : x

திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது சோகம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிகின்றனர். இந்த நிலையில், இன்று (மே 31) அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரை சாலைக்கு கொண்டு வரும் பணியின்போது திடீரென தேருக்கும், சுவருக்கும் இடையில் சிலர் சிக்கிக் கொண்டனர். சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய ஹர்ஷவர்தன் (19) என்கிற இளைஞர் பலத்த காயமடைந்தார்.

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹர்ஷவர்தன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த்ந கல்லூரி மாணவர் சஷ்டிகன் (19) தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேரோட்டத்தின்போது நிகழ்ந்த இந்த கோர சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. திருச்செங்கோடு தேரோட்டத்தின்போது நடந்தது என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
முதல்வர் விஜய் இரங்கல்
Image Credit : CM Vijay FB

முதல்வர் விஜய் இரங்கல்

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த கவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (வயது 18). த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

5 லட்சம் நிவாரண நிதி

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருசடிகன் (வயது 19) த/பெ கௌரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ள்ளேன்

Related Articles

Related image1
CM Vijay : கோட் சூட்டில் இருந்து பட்டு வேட்டி சட்டைக்கு மாறிய முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
Related image2
திருச்செங்கோடு மரகத லிங்கத்தின் மர்ம வரலாறு: சுயம்பு லிங்கம் சிறப்பு!

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கோவில்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
Recommended image2
Now Playing
திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
Recommended image3
Cauvery Dispute: திமிர் காட்டும் கர்நாடகம்.. விஜய் கையில் எடுத்த அஸ்திரம்.. விழிபிதுங்கும் டி.கே.சிவகுமார்!
Related Stories
Recommended image1
CM Vijay : கோட் சூட்டில் இருந்து பட்டு வேட்டி சட்டைக்கு மாறிய முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
Recommended image2
திருச்செங்கோடு மரகத லிங்கத்தின் மர்ம வரலாறு: சுயம்பு லிங்கம் சிறப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved