MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருப்பதியைப் போல தமிழகக் கோவில்களில் 'பிரேக்' தரிசனம் அறிமுகம்!

திருப்பதியைப் போல தமிழகக் கோவில்களில் 'பிரேக்' தரிசனம் அறிமுகம்!

தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் பக்தர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'பிரேக்' தரிசன முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை கோவில்களில் முதற்கட்டமாக இந்த முறை நடைமுறைக்கு வரும்.

2 Min read
Author : SG Balan
Published : Jul 10 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகக் கோயில்கள்
Image Credit : Google

தமிழகக் கோயில்கள்

தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆகியவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

25
நீண்ட காத்திருப்பு தேவையில்லை
Image Credit : our own

நீண்ட காத்திருப்பு தேவையில்லை

பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் இந்த நீண்ட காத்திருப்பு பக்தர்கள் மத்தியில் வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. இந்த சிரமங்களைத் தவிர்க்கவும், நீண்டநேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும், இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
அடேங்கப்பா! பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா? தங்கம் எவ்வளவு?
Related image2
கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!
35
3 கோவில்களில் 'பிரேக்' தரிசனம்
Image Credit : Flickr

3 கோவில்களில் 'பிரேக்' தரிசனம்

முதற்கட்டமாக, பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 'பிரேக்' தரிசன முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த முறையின் கீழ், பக்தர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்குத் தேவையான தரிசன தேதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம், கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனை தரிசிக்க முடியும்.

45
'பிரேக்' தரிசனத்தின் சிறப்பு
Image Credit : stockPhoto

'பிரேக்' தரிசனத்தின் சிறப்பு

'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம், மிகக் குறைந்த காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை அடிப்படையிலான விரைவு தரிசனம் வழங்குவதாகும். 'பிரேக்' தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தரிசனத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும். உதாரணமாக, பழனி கோவிலைப் பொறுத்தவரை, 300 ரூபாய் கட்டணத்தில் 'பிரேக்' தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
திருப்பதி கோயில் முன்னுதாரணம்
Image Credit : our own

திருப்பதி கோயில் முன்னுதாரணம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்கனவே இந்த 'பிரேக்' தரிசன முறை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. அதே முறையைப் பின்பற்றி, இந்த மூன்று கோவில்களிலும் 'பிரேக்' தரிசன முறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த மூன்று கோவில்களைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்ற பிற முக்கிய கோவில்களுக்கும் இந்த 'பிரேக்' தரிசன முறை விரிவுபடுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய தரிசன முறை, பக்தர்களின் வசதியை மேம்படுத்துவதோடு, கோவில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
திருப்பதி
தமிழ்நாடு
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
Recommended image2
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்.. இந்த 5 பேரில் ஒருவர் தான் குற்றவாளியா?
Recommended image3
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.. மீறினால் ஆப்பு தான்!
Related Stories
Recommended image1
அடேங்கப்பா! பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா? தங்கம் எவ்வளவு?
Recommended image2
கும்பாபிஷேகம் நடந்த மூன்று நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved