MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!

மாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!

சீமான், மலைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மலைகளுக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
SG Balan
Published : Sep 05 2025, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சீமான் நடத்தும் மலைகள் மாநாடு
Image Credit : Asianet News

சீமான் நடத்தும் மலைகள் மாநாடு

திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அவர், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார்.

24
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி
Image Credit : Asianet News

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி

ஆரம்ப கட்டத்தில் 1.1% ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.1% ஆக உயர்ந்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

சீமானின் பேச்சுகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அவ்வப்போது மாநாடுகளை நடத்தி வரும் அவர், இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.

Related Articles

Related image1
Now Playing
தெரு நாய்யை ஒழிப்பதால், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது - சீமான் பேட்டி
Related image2
நாட்டை குட்டிச்சுவரா ஆக்கியதே காங்கிரஸ் தான்! அவங்கள விமர்சிக்கலனா எப்படி விஜய்? சீறும் சீமான்!
34
மாடுகள், மரங்களுக்கு மாநாடு
Image Credit : Google

மாடுகள், மரங்களுக்கு மாநாடு

அந்த வகையில், கடந்த ஜூலை 10-ம் தேதி மதுரையில் மாடுகள் மாநாட்டையும், ஆகஸ்ட் 30-ம் தேதி திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டையும் சீமான் நடத்தினார். அவரது இந்த முயற்சி, இயற்கை மற்றும் விலங்குகள் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் அழிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அவற்றை காப்பாற்றும் வகையில் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

44
மலைகளுக்கான மாநாட்டு
Image Credit : Asianet News

மலைகளுக்கான மாநாட்டு

அந்த வகையில், மலைகளுக்கான மாநாட்டை சீமான் நடத்த இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒரு மாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான இடத்தேர்வு நடைபெற்று வருகிறது. மலைகளின் மாநாட்டைத் தொடர்ந்து, நீர்நிலைகளுக்கான மாநாடும் நடத்தப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சீமான்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved