MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆதி நீயே! ஆழித்தாயே! சீமானின் அடுத்த சம்பவம்.. நவ. 21ல் கடலம்மா மாநாடு!

ஆதி நீயே! ஆழித்தாயே! சீமானின் அடுத்த சம்பவம்.. நவ. 21ல் கடலம்மா மாநாடு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 13 2025, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சீமான் நடத்தும் அடுத்த மாநாடு!
Image Credit : x/seeman

சீமான் நடத்தும் அடுத்த மாநாடு!

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து நடத்தி வரும் தொடர் மாநாடுகளின் அடுத்த கட்டமாக, தற்போது கடல் வளத்தைப் பாதுகாப்பது குறித்து மாநாட்டை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 'மரங்கள் மாநாடு', 'கால்நடை மாநாடு', 'மலைகள் மாநாடு' என இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு மாநாடுகளை நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

23
கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு'
Image Credit : Asianet News

கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு'

இந்நிலையில், கடல் வளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

"திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் வரும் நவம்பர் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். 'ஆதி நீயே! ஆழித்தாயே!' என்ற முழக்கத்தை முன் வைத்து இம்மாநாடு நடைபெறும்.

Related Articles

Related image1
சான்ஸே இல்ல தம்பி.. விஜயகாந்த் போல முடிவு எடுக்க மாட்டேன்! கெத்து காட்டும் சீமான்!
Related image2
மாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!
33
நெல்லையில் சீமான்
Image Credit : Asianet News

நெல்லையில் சீமான்

இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். கடல் வளங்கள் மற்றும் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் அவசரத் தேவையை இந்த மாநாடு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சீமான்
தமிழ்நாடு
திருநெல்வேலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
சான்ஸே இல்ல தம்பி.. விஜயகாந்த் போல முடிவு எடுக்க மாட்டேன்! கெத்து காட்டும் சீமான்!
Recommended image2
மாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved