MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சுட்டெரிக்கும் வெயில்.. இரவில் வாட்டி வதைக்கும் குளிர்.. மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை அப்டேட்

சுட்டெரிக்கும் வெயில்.. இரவில் வாட்டி வதைக்கும் குளிர்.. மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை அப்டேட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையும், நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 19 2026, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கடும் பனிபொழிவு
Image Credit : Google

கடும் பனிபொழிவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மூடு பனி மற்றும் உறை பனி ஒருசில இடங்களில் நிலவுகிறது. அதாவது காலை நேரத்தில் பனியும் பிற்பகலில் கடுமையான வெயிலும் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழை மற்றும் பனிபொழிவு குறித்தும் வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

25
வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு
Image Credit : our own

வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு

அதாவது வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Related image2
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
35
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அதேபோல் ஜனவரி 22 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 23 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
உறைபனி எச்சரிக்கை
Image Credit : Asianet News

உறைபனி எச்சரிக்கை

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு முதல் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

55
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை நிலவரம்
Image Credit : ANI

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுக ஆட்சியில் கட்டண கொள்ளை.. வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது.. நயினார் சாபம்
Recommended image2
பேருந்து மீது நின்ற உங்களுக்கு எதுவும் தெரியவில்லையா..? விஜய்யை ரவுண்டு கட்டிய சிபிஐ அதிகாரிகள்
Recommended image3
Now Playing
சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்
Related Stories
Recommended image1
லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved