MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு குஷி.! பரிசு கொடுக்கும் தமிழக அரசு- வெளியான அசத்தல் அறிவிப்பு

விவசாயிகளுக்கு குஷி.! பரிசு கொடுக்கும் தமிழக அரசு- வெளியான அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு தரிசு நிலங்களை பயிரிடக்கூடிய நிலங்களாக மாற்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானமும் உயரும்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 10 2025, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவசாயிகளுக்கான திட்டங்கள்
Image Credit : Google

விவசாயிகளுக்கான திட்டங்கள்

தமிழ்நாடு அரசு எப்போதுமே விவசாயத்தை முதன்மைப்படுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், புதிய முயற்சியாக தரிசு நிலங்களை பயிரிடும் நிலங்களாக மாற்றும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

25
திட்டத்தின் நோக்கம்
Image Credit : our own

திட்டத்தின் நோக்கம்

விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பயிரிடாமல் விட்டுப்போகும் தரிசு நிலங்களை உழவு செய்யக்கூடிய நிலங்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இதன் மூலம்:

விவசாய உற்பத்தி உயரும்.

காலியாக இருக்கும் நிலங்கள் பயனுள்ள நிலங்களாக மாறும்.

உழவர்களின் வருமானம் அதிகரிக்கும்.

Related Articles

Related image1
இனி இந்த ஆசிரியர்களுக்கு பள்ளியில் இடம் இல்லை.! உடனே நீக்குங்க- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
Related image2
விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு! ட்விஸ்ட் வைத்த கலெக்டர்!
35
தகுதி நிபந்தனைகள்
Image Credit : our own

தகுதி நிபந்தனைகள்

இந்தத் திட்டத்தின் பயனை பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:

தரிசு நிலம் குறைந்தது 2,504 சதுர மீட்டர் (சுமார் 62 சென்ட்) பரப்பளவில் இருக்க வேண்டும்.

தரிசு நிலம் தொடர்ச்சியாக பராமரிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

குறைந்தது 8 விவசாயிகளுக்கான பயனாளி குழுவில் இருக்க வேண்டும்.

45
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Asianet News

விண்ணப்பிக்கும் முறை

விவசாயிகள், தங்கள் தரிசு நிலத்தை பயிர் நிலமாக மாற்றுவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். இதற்கான வசதி QR குறியீடு (QR Code) ஸ்கேன் செய்து பெறக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

போஸ்டரில் வழங்கப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக விண்ணப்பப் படிவம் கிடைக்கும்.

அதேபோல், அருகிலுள்ள வேளாண்மை அலுவலகம் அல்லது உழவர் நலத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 செப்டம்பர் 2025.

55
திட்டத்தின் சிறப்பு
Image Credit : our own

திட்டத்தின் சிறப்பு

தரிசு நிலங்களை பயனுள்ள நிலங்களாக மாற்றுவதன் மூலம், வேளாண் உற்பத்தி 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

கிராமங்களில் உள்ள பராமரிக்கப்படாத நிலங்கள், புதிய பசுமை நிலங்களாக மாறும்.

விவசாயிகளின் குடும்ப வருமானத்தை அதிகரித்து, கிராமப்புற வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தத் திட்டம், விவசாயத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான அடிக்கல்லாக அமையும். உழவர் நலனுக்காக அரசு தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. தரிசு நிலங்களை பயிரிடும் நிலங்களாக மாற்றும் இந்தத் திட்டம், விவசாயிகளின் வாழ்வில் புது நம்பிக்கை விதைக்கும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விவசாயக் கடன்
விவசாயம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு.. காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
Recommended image3
சொந்த கட்சியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட அன்புமணி! இனியாவது உண்மையை ஆராய்ந்து அறிக்கை விடுங்க! சும்மா இறங்கி அடிக்கும் MRK
Related Stories
Recommended image1
இனி இந்த ஆசிரியர்களுக்கு பள்ளியில் இடம் இல்லை.! உடனே நீக்குங்க- பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
Recommended image2
விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு! ட்விஸ்ட் வைத்த கலெக்டர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved