MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

1 Min read
SG Balan
Published : Jun 29 2025, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
Image Credit : our own

அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 29, 2025) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

24
தமிழக மீனவர்கள்
Image Credit : our own

தமிழக மீனவர்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஜூன் 29, 2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன், IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்!
Related image2
தமிழக மீனவர்களை சுட்டு பிடியுங்கள்.! கடற்படைக்கு சென்ற கோரிக்கை- இலங்கை மீனவர்கள் அராஜகம்
34
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Image Credit : our own

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

இத்தகைய கைது நடவடிக்கைகள் மீனவர்களுக்கு நிதி இழப்பிற்கும், நீண்டகால சட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுப்பதோடு, படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சிறை பிடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

44
தூதரக நடவடிக்கை தேவை
Image Credit : Getty

தூதரக நடவடிக்கை தேவை

மேலும், வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இச்சூழலில், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
இலங்கை
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved