- Home
- Tamil Nadu News
- ஜனநாயகம் படம் வெளியானதற்கு எல்.முருகன் தான் காரணமா? ஒரே போடாக போட்ட செங்கோட்டையன்!
ஜனநாயகம் படம் வெளியானதற்கு எல்.முருகன் தான் காரணமா? ஒரே போடாக போட்ட செங்கோட்டையன்!
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஆன்லைனில் சட்டவிரோதமாக கசிந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகனே பொறுப்பு என செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாற்றத்தை விரும்புவோர் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 234 தொகுதியில் வேட்பாளரை களமிறங்கியுள்ளார். இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றும் படத்தை வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் முழுவதும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகன்' படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு எல்.முருபன் தான் பொறுப்பு. அந்த துறைக்கான அமைச்சர் அவர்தான். கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு எல்.முருபன் தான் பொறுப்பு. அந்த துறைக்கான அமைச்சர் அவர்தான். கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வருகிறேன். தேர்தல் களத்தில் பத்து முறை தோற்ற பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது என்று மக்களே சொல்கிறார்கள். அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம். அது வீணாகிவிடும். ஆகவே மாற்றத்தை விரும்புவோர் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமி தான். அவர் துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

