MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.! குவியும் திருநங்கைகள்

உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.! குவியும் திருநங்கைகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்து, மறுநாள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறும்.

1 Min read
Ajmal Khan
Published : Apr 30 2025, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது.  3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் தங்கள் குலதெய்வமாக வணங்கும் கோயிலாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க  தமிழகம் மட்டுமின்றி,

24
கூவாகத்தில் குவியும் திருநங்கைகள்

கூவாகத்தில் குவியும் திருநங்கைகள்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான  திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.திருநங்கைகள்  கூத்தாண்டவரை தங்கள் கணவராக பாவித்து திருவிழாவின் போது தாலி கட்டிக் கொண்டு ஆடி பாடி மகிழ்ந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மறுநாள் கூத்தாண்டவர் தேர் அழிகலம் நோக்கி புறப்பட்ட பிறகு திருநங்கைகள் பந்தலடியில் தாலி அறுத்து விதவைக் கோலம் பூண்டு சோகத்துடன் தங்கள் இல்லங்களுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

Related Articles

Related image1
Koovagam: கூத்தாண்டவர் கோவில் திருவிழா; தாலிகட்டிக் கொண்டு திருநங்கைகள் இரவு முழுவதும் நடனமாடி உற்சாகம்
Related image2
அழகி போட்டியில் பங்கேற்று மாடர்ன் உடையில் ஒய்யாரமாக நடந்துவந்த திருநங்கைகள்
34
கூழ் குடங்களுடன் ஊர்வலம்

கூழ் குடங்களுடன் ஊர்வலம்

மிகவும் பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.கூவாகம், தொட்டி, நத்தம், வேலுார், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபட்டனர்.

44
தாலி கட்டும் நிகழ்ச்சி

தாலி கட்டும் நிகழ்ச்சி

இந்தச் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதன்பின்னர் கூவாகம் அருகே உள்ள பந்தலடி பகுதியில் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும்,16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கோவில் நிகழ்வுகள்
திருநங்கை
மதுரை சித்திரைத் திருவிழா
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved