- Home
- Tamil Nadu News
- இதற்காக தான் காதல் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்! அம்மு சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த சிசிடிவி!
இதற்காக தான் காதல் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்! அம்மு சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த சிசிடிவி!
Husband Murder: கடந்த 10ம் தேதி இரவு வழக்கம் போல அந்தோணி ராபின் வந்து தூங்கியிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் தீக்காயங்களுடன் அந்தோணி ராபின் அலறி கூச்சலிட்டுள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கொலை சம்பவங்கள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராபின் (25). இவரது மனைவி அம்மு (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அம்முவுக்கு தனது அக்கா கணவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் அந்தோணி ராபினுக்கு தெரியவந்ததை மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அம்முவுக்கு தனது அக்கா கணவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் அந்தோணி ராபினுக்கு தெரியவந்ததை மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு வழக்கம் போல அந்தோணி ராபின் வந்து தூங்கியிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் தீக்காயங்களுடன் அந்தோணி ராபின் அலறி கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்தோணி ராபின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தோணி ராபின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அவரது மனைவி அம்முவை சந்தேகத்தின் பேரில் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலை கண்டித்ததால் தனது கணவனை, உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் எரித்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.
மேலும் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: எனது அக்காவின் கணவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இது தெரிந்த எனது கணவர் அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று போதையில் மீண்டும் என்னிடம் இவ்விவகாரம் தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் கணவர் தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றேன். ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு வெளியே முயன்றார். ஆனால் விடாமல் அவரை விரட்டி ஓடிவந்து தீயை பற்ற வைத்தேன் என்றார்.

