MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!

இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!

Ration Shop: எவ்வித புகாருக்கும் இடமின்றி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3 என்ற வகையில் ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 14 2026, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பொங்கல் பரிசு தொகுப்பு
Image Credit : Asianet News

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, சாதனை புரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கின்ற மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்திலே முழுவதுமாக கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக கூட்டுறவுத் துறை விளங்கி வருகிறது.

25
குடும்ப அட்டைதாரர்கள்
Image Credit : Asianet News

குடும்ப அட்டைதாரர்கள்

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் 3000 ரொக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்கள்.

Related Articles

Related image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Related image2
விஜய் குணமே இதுதான்.. படுக்கையறை முதல்.. பி.டி. செல்வகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
35
ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத் தொகை
Image Credit : our own

ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத் தொகை

அதன்படி, 08.01.2026 முதல் 24.01.2026 வரை ரேஷன் கடை ஊழியர்களால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சிறப்பாக வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்யும் விதமாக கடந்த காலங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50 பைசா வீதம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் மேற்படி திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடமின்றி, செவ்வனே செயல்படுத்தியதாகவும் அவ்வகையில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3 என்ற வகையில் ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்கள்.

45
குஷியில் ரேஷன் கடை ஊழியர்கள்
Image Credit : our own

குஷியில் ரேஷன் கடை ஊழியர்கள்

நியாய விலைக் கடை பணியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, 2026-பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக, ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.3 வீதம் வழங்க ஆணையிட்டுள்ளார்கள். மேலும் இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.6,47,43,054 (ரூபாய் ஆறு கோடியே நாற்பத்து எழு இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து ஐம்பத்து நான்கு மட்டும்)-ஐ வழங்க நிருவாக அனுமதி அளித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

55
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
Image Credit : our own

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார்கள் கூட்டுறவு துறையின் சார்பிலும், நியாய விலைக் கடை பணியாளர்கள் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரேஷன் விலை கடை ஊழியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பொங்கல்
தமிழ்நாடு
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
Recommended image2
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..
Recommended image3
விஜய் குணமே இதுதான்.. படுக்கையறை முதல்.. பி.டி. செல்வகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Related Stories
Recommended image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Recommended image2
விஜய் குணமே இதுதான்.. படுக்கையறை முதல்.. பி.டி. செல்வகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved