MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு!

காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு!

கனமழை விடுமுறையை ஈடுசெய்ய இன்று செயல்படுவதாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுவதால், இந்த விடுமுறை அறிவிப்பு.

1 Min read
vinoth kumar
Published : Nov 01 2025, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வடகிழக்கு பருவமழை
Image Credit : Google

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாவே விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எதிர்பாராத மழை பெய்தது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தன.

24
கடந்த 22ம் தேதி விடுமுறை
Image Credit : our own

கடந்த 22ம் தேதி விடுமுறை

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 22ம் தேதி செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்ததால் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
நாளை பள்ளி மாணவர்களுக்கு Working day-வா? இல்லையா? வெளியான அறிவிப்பு!
Related image2
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.50,000 பரிசு! நவம்பர் 05ம் தேதி கடைசி நாள்!
34
நவம்பர் 1ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு
Image Credit : our own

நவம்பர் 1ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதியான இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

44
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை
Image Credit : Google

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை

இதுகுறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக நியமனம் செய்யப்பட்டு உள்ள தொடர்புடைய ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர். ஆகையால் சனிக்கிழமை வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. எனவே மாவட்டத்தில் இன்று எந்த பள்ளியும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளிகள் விடுமுறை
விடுமுறை
பள்ளி மாணவர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved