MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • #BREAKING: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

#BREAKING: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

1 Min read
vinoth kumar
Published : Aug 09 2025, 07:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கனமழை
Image Credit : Google

கனமழை

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

24
 கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதி
Image Credit : Google

கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதி

அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று திருவண்ணாமலை கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கனமழையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Articles

Related image1
#BREAKING: மாணவர்களுக்கு குட்நியூஸ்! இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! வெளியான அதிரடி அறிவிப்பு!
Related image2
ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு! ஆகஸ்டு 29ம் தேதி வரைக்கும் தான் டைம்! அதுவும் பள்ளி மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்!
34
வானிலை மையம் எச்சரிக்கை
Image Credit : ANI

வானிலை மையம் எச்சரிக்கை

அதேபோல் இன்றும் வட தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

44
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : our own

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
விடுமுறை
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved