MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று ஓடிய திகில் சம்பவம்! அலறிய 55 பயணிகளின் நிலை என்ன?

அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று ஓடிய திகில் சம்பவம்! அலறிய 55 பயணிகளின் நிலை என்ன?

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் 55 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

1 Min read
vinoth kumar
Published : May 20 2025, 12:37 PM IST| Updated : May 20 2025, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசுப் போக்குவரத்துக் கழகம்
Image Credit : our own

அரசுப் போக்குவரத்துக் கழகம்

போக்குவரத்து துறைக்கு சொந்தமான எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 260 பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கும் அரசு பேருந்து சேவை கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாமல் சக்கரம் கழன்று ஒடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

24
 55 பயணிகளுடன் சென்ற பேருந்து
Image Credit : Google

55 பயணிகளுடன் சென்ற பேருந்து

இந்நிலையில் மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இருந்து பல்வேறு கோட்டங்களை சேர்ந்த குறிப்பாக மதுரை, காரைக்குடி, சிவகங்கை அரசு பேருந்துகள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் கண்ணன் (54) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் 55 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

Related Articles

Related image1
அட கடவுளே! இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங்க! ஐயோ என்னை விட்டு போயிட்டியே கதறும் பெற்றோர்கள்!
Related image2
பண மழையில் நனையப்போகும் அரசு ஊழியர்கள்! முதல்வர் ஸ்டாலின் வௌியிட்ட அறிவிப்பு!
34
முன் பக்க டயர் வெடித்து விபத்து
Image Credit : Google

முன் பக்க டயர் வெடித்து விபத்து

அப்போது பேருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தட்டான்குளம் வந்துக்கொண்டிருந்த போது இடது பக்கத்தின் முன் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது மட்டுமல்லாமல் 100 மீட்டர் தூரம் கழன்று ஓடியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். ஆனால், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 55 பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

44
உயிர் தப்பிய பயணிகள்
Image Credit : Google

உயிர் தப்பிய பயணிகள்

உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி வேறு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் போக்குவரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved