- Home
- Tamil Nadu News
- ஆதாரம் காட்டுங்கள் நிலத்தை இலவசமாக எழுதி தருகிறோம்.! மீண்டும் தவெகவிற்கு சவால் விடுத்த ஜி ஸ்கொயர்
ஆதாரம் காட்டுங்கள் நிலத்தை இலவசமாக எழுதி தருகிறோம்.! மீண்டும் தவெகவிற்கு சவால் விடுத்த ஜி ஸ்கொயர்
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதே போல பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் பகுதியில் எந்த நிலமும் இல்லையென தெரிவித்துள்ளது.

ஆதாரம் காட்டுங்கள் நிலத்தை இலவசமாக எழுதி தருகிறோம்
சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய முடிவு செய்துள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த் நிலையில் தவெக தலைவர் விஜய் நேரடியாக பரந்தூர் பகுதிக்கு சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மாநில அரசு, மத்திய அரசு இவ்வளவு திட்டமிடுகிறது என்றால். உள்ளுக்குள் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
பரந்தூரில் விஜய்
இதனையடுத்து ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் பரந்தூர் புதிய விமான நிலைய விரிவாக்கப் பகுதியில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. எங்கள் நிறுவனத்திற்கு எந்தக் கட்பசியுடனும் எந்த அரசியல் தொடர்பும் இல்லையென தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் ஜி ஸ்கொயர் தொடர்பாக தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீசன் தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில் பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலத்தை ஜி ஸ்கொயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை மறுத்துள்ள ஜி ஸ்கொயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்த நிலமும் இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகதீசனுக்கு அளித்த குற்றச்சாட்டிற்கு ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் விளக்கம். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் எங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எந்த நிலமோ சொத்தோ இல்லை என ஜி ஸ்கொயர் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும்.
பண்ணூரில் எந்த நிலமும் இல்லை
இதுபோன்ற தவறான தகவல்களை எதிரிகள் தொடர்ந்து பரப்புவதால் அன்புக்குரிய தமிழக வெற்றிக் கழக முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம். பண்ணூர் கிராமத்தில் மொத்தமே 800 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் கிராமங்களில் 1 முதல் 440 வரை சர்வே எண்கள் உள்ளன. இந்த சர்வே எண்களில் பதிந்துள்ள நில உரிமையாளர்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடு மற்றும் சர்வே போர்டலில் பார்க்க முடியும்.
இலவசமாக கொடுக்க தயார்
"பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை" இதற்குப் பிறகும் பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் எங்கள் ஜி ஸ்கொயர் பெயரிலோ அல்லது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவரின் பெயரிலோ உள்ளதாகத் உண்மையான தகவல் அளித்தால், அந்த நிலத்தை நீங்கள் அடையாளம் காட்டும் நபருக்கு இலவசமாக மாற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.