MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்பில் மகேசை அலற விட்டு மாஸ் காட்டிய அதிமுக..! திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

அன்பில் மகேசை அலற விட்டு மாஸ் காட்டிய அதிமுக..! திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் கூட்டங்களை திரட்டி மாஸ் காட்டிய இபிஎஸ், இன்று முதல் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

2 Min read
vinoth kumar
Published : Jul 29 2025, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேநேரத்தில் அதிமுக விட்டதை பிடிக்க வேண்டும் என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் பொது எதிரியை வீழ்த்த கூட்டணியில் இணையுமாறு விஜய், சீமான் உள்ளிட்ட கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்து வருகிறார்.

24
Image Credit : X/Edappadi Palanisamy

இந்நிலையில் ஆளும் திமுகவுக்கு முன்னதாகவே அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 7ம் தேதி கோவையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை தொடங்கினார். முதலில் அரசியல் விமர்சகர்கள் இபிஎஸ் சுற்றுப்பயணம் பிசுபிசுத்து போகும் கூறப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தை காட்டி கெத்து காட்டினார். கோவைவில் மட்டும் அப்படி இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போகும் இடமெல்லாம் அதிக கூட்டங்களை காட்டி இபிஎஸ் மாஸ் காட்டி வருகிறார். வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 46 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்துள்ளார்.

Related Articles

Related image1
டீக்கடை, இட்லிக்கடைகளுக்கு லைசென்ஸ் கட்டணம் இவ்வளவா? அடியோடு ஒழிக்க சதியா? கொதிக்கும் அன்புமணி!
Related image2
நடுக்கத்தில் முதல்வர்! இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது! ஒரே போடு போட்ட H.ராஜா!
34
Image Credit : X/Edappadi Palanisamy

இன்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகிலும், இரவு 7.45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலில் பேசுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அலைக்கடலென தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44
Image Credit : Google

இதுதொடர்பாக வீடியோ, போட்டோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அம்மாவட்ட அமைச்சர்களான அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு மிரண்டு போயுள்ளனர். விரைவில் உதயநிதி ஸ்டாலின் திமுக தரப்பில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அவருக்கு இதைவிட இரண்டு மடங்கு கூட்டத்தைக் கூட்ட அம்மாவட்ட அமைச்சர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
அரசியல்
அதிமுக பாஜக கூட்டணி
திமுக
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved