MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • தவெகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கிடைக்கக்கூடாது என பல தொல்லை கொடுத்த திமுக..! போராடி வக்கீல்களைப் பிடித்தோம் ஆதவ் பகீர்

தவெகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கிடைக்கக்கூடாது என பல தொல்லை கொடுத்த திமுக..! போராடி வக்கீல்களைப் பிடித்தோம் ஆதவ் பகீர்

கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசு தங்களைக் குறிவைத்து ஜனநாயகப் படுகொலை செய்வதாகவும், காவல்துறைதான் தங்களை வெளியேறச் சொன்னதாகவும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 13 2025, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சிபிஐ விசாரணை
Image Credit : Google

சிபிஐ விசாரணை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் குழு அமைத்து விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆதவ் அர்ஜுனா
Image Credit : Asianet News

ஆதவ் அர்ஜுனா

இந்த உத்தரவுக்குப் பிறகு டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திமுக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான பல கேள்விகளை முன் வைத்தார். அப்போது எங்கள் தரப்பு வைத்த மூன்று கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. காவல்துறை சொன்ன இடத்தில் தான் விஜய் பிரச்சாரம் செய்தார். அதேபோல், விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கூறுவது தவறு. கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸ் அனுமதி அளித்திருந்தது. அந்த நேரத்துக்குள் தான் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார்.

Related Articles

Related image1
சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
Related image2
ஓவர் ஆக்டிங்கால் மாட்டிக்கொண்ட தமிழக அரசு! உண்மை வெளிவரப்போகுது! ஒருத்தனையும் விடக்கூடாது! அன்புமணி
34
காவல்துறை அதிகாரிகள்
Image Credit : x/Aadhav Arjuna

காவல்துறை அதிகாரிகள்

கரூருக்கு நாங்கள் வந்தபோது, கரூர் காவல்துறை எங்களை வரவேற்றது. வழக்கத்துக்கு மாறாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாது, கரூரில் மட்டும் எங்களை காவல்துறை வரவேற்றது ஏன்? கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது காவல்துறை அதிகாரிகள் தான் எங்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். நாங்கள் அப்பவும் கூட கரூர் பார்டரில் காத்துக்கொண்டிருந்தோம். காவல்துறைதான் கலவரம் வரும்.. நீங்கள் வரவேண்டாம் என்றார்கள். ஆகையால் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோமே தவிர நாங்கள் தப்பியோடவில்லை.

44
திமுக அரசு
Image Credit : x/Aadhav Arjuna

திமுக அரசு

சம்பவம் நடந்த முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்களும் மனிதாபிமானமுள்ள மனிதர்கள்தான். இதை திமுக அரசு பயன்படுத்திக்கொண்டது. இந்த சம்பவத்தை வைத்து ஒரு கட்சியை அழிக்கும் ஜனநாயகப் படுகொலையை திமுக அரசு செய்து வருகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல தவெகவுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என பல்வேறு தொல்லைகளை திமுக அரசு கொடுத்தது. போராடி தான் வழக்கறிஞர்களை பிடித்தோம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
திமுக
உச்ச நீதிமன்றம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
Recommended image2
ஓவர் ஆக்டிங்கால் மாட்டிக்கொண்ட தமிழக அரசு! உண்மை வெளிவரப்போகுது! ஒருத்தனையும் விடக்கூடாது! அன்புமணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved