MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிரிவினைவாதம் பேசி அரசியல் செய்யும் கட்சி திமுக! இது எல்லாருக்கும் தெரியும்! வானதி சீனிவாசன் பகீர்

பிரிவினைவாதம் பேசி அரசியல் செய்யும் கட்சி திமுக! இது எல்லாருக்கும் தெரியும்! வானதி சீனிவாசன் பகீர்

திமுக கட்சி தொடங்கிய காலம் முதலே வடக்கு-தெற்கு பிரிவினைவாதத்தை வளர்த்து, வட மாநில மக்களுக்கு எதிராக வெறுப்பு சித்தாந்தத்தை பரப்பி வருவதாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி, திமுகவின் இந்த வெறுப்பு அரசியலைத்தான் அம்பலப்படுத்தியுள்ளார்.

2 Min read
vinoth kumar
Published : Nov 01 2025, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வானதி சீனிவாசன்
Image Credit : Google

வானதி சீனிவாசன்

தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் இடையை மட்டுமல்ல, தமிழர்களுக்கும், வட மாநில மக்களுக்கும் இடையை கட்சி தொடங்கிய காலம் முதல் பகையை வளர்த்து வருவது திமுகதான் வடக்கு - தெற்கு பிரிவினைதான் திமுகவின் அடிப்படை சித்தாந்தம் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களுக்கு எதிரான திமுகவின் வெறுப்பு சித்தாந்தத்தை தான் பிரதமர் நரேந்திர மோடி அம்பலப்படுத்தியுள்ளார். இந்தியாவின் ஒரு பகுதி மக்களை இழிவு செய்வதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக எப்போதுமே, 'வடக்கு - தெற்கு’, 'ஆரியம் - திராவிடம்' என பிரிவினைவாதம் பேசி அரசியல் செய்யும் கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை இங்கு வரவழைக்கிறார்கள்.

25
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி
Image Credit : Google

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி

திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வட மாநிலத் தொழிலாளர்களை குறிப்பாக பீகார் மாநிலத்திலிருந்து வந்தவர்களை, "பானி பூரி விற்க வந்தவர்கள், கழிப்பறை சுத்தம் செய்ய வந்தவர்கள்" என இழிவு செய்ததை யாரும் மறந்து விட முடியாது. வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக திமுக வெறுப்பை விதைத்ததால் சில இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவமும் நடந்தது. இது கடந்த 2023ல் பீகாரிலும் பெரும் பிரச்னையாக வெடித்தது. தருமபுரி தொகுதி திமுக எம்.பியாக இருந்த செந்தில்குமார், நாடாளுமன்றத்திலேயே பீகார் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களை, மாட்டுமூத்திர மாநிலங்கள் என இழிவுபடுத்தினார்.

Related Articles

Related image1
அதிமுக - பிஜேபி - தவெக சேர்ந்தா டெபாசிட் கூட கிடைக்காது..! டம்மி பீஸ் என s.ve சேகர் பேட்டி
Related image2
சொன்னதை செய்த எடப்பாடி..! 'நாளை நடக்க போறதை பாருங்க'..! செங்கோட்டையன் அதிரடி பேட்டி!
35
பிரதமர் நரேந்திர மோடி
Image Credit : our own

பிரதமர் நரேந்திர மோடி

இந்த உண்மைகளைத்தான், பீகார் தொழிலாளர்களுக்கு எதிரான திமுகவின் வெறுப்பு சித்தாந்தத்தை தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார். "தமிழ்நாட்டில் உழைக்கும் பீகார் தொழிலாளர்களை திமுக துன்புறுத்துகிறது. பீகார் மக்களை அவமதித்தவர்களை, பீகாரிலேயே பிரசாரம் செய்ய காங்கிரஸ் அழைத்துள்ளது" என்ற உண்மையை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

45
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Image Credit : F/mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் பகையை உண்டாக்குவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் இடையை மட்டுமல்ல, தமிழர்களுக்கும், வட மாநில மக்களுக்கும் இடையை கட்சி தொடங்கிய காலம் முதல் பகையை வளர்த்து வருவது திமுகதான் வடக்கு - தெற்கு பிரிவினைதான் திமுகவின் அடிப்படை சித்தாந்தம்.

55
 வட மாநில மக்களையும் இழிவு செய்யும் திமுக
Image Credit : our own

வட மாநில மக்களையும் இழிவு செய்யும் திமுக

பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களை குறை சொல்லவில்லை. பீகார் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் திமுகவினரைதான் மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார். சிறுபான்மை வாக்குகளை மொத்த அறுவடை செய்வதற்காக ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் இழிவு செய்யும் திமுக, அதற்கு இணையாக வட மாநில மக்களையும் இழிவு செய்து வருகிறது. இப்படி இந்தியாவின் ஒரு பகுதி மக்களை இழிவு செய்வதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
பிஜேபி
வானதி சீனிவாசன்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved