MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.! அலறும் இபிஎஸ்! ஐகோர்ட்டில் பரபரப்பு மனு!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.! அலறும் இபிஎஸ்! ஐகோர்ட்டில் பரபரப்பு மனு!

Chennai High Court: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணை கோரி திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 18 2026, 06:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

25
Image Credit : Google

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோருக்கு எதிராக தனித் தனியாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Related Articles

Related image1
அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!
Related image2
அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது பாஜகவின் பிளான்.! அதுக்கு இபிஎஸ் உடந்தை.. புதிய குண்டை தூக்கி போட்ட முன்னாள் நிர்வாகி
35
Image Credit : our own

மேலும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி உள்ளிட்டோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2016-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ.சத்யா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போன்றவற்றின் விசாரணையும் நிலுவையில் உள்ளது.

45
Image Credit : istock

லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் மட்டுமே வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.

55
Image Credit : Asianet News

இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய முடியும். தற்போது மத்தியில் ஆளும் கட்சியுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காகவே அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. தேர்தல் நெருங்கம் நேரத்தில் திமுக தாக்கல் செய்துள்ள மனு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
சென்னை உயர் நீதிமன்றம்
எஸ். பி. வேலுமணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பெரும் வாய்ப்பளிக்க வேண்டும்
Recommended image2
Now Playing
கருணாநிதி மீது எம்ஜிஆர் எய்த ஊழல் அம்புகள்..! நட்பு முறிந்த பின் நடந்த அந்த நள்ளிரவு அரசியல் போர்!
Recommended image3
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை.! பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Related Stories
Recommended image1
அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!
Recommended image2
அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது பாஜகவின் பிளான்.! அதுக்கு இபிஎஸ் உடந்தை.. புதிய குண்டை தூக்கி போட்ட முன்னாள் நிர்வாகி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved