MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ஷாக்! நடைபயணத்திற்கு தடை விதித்த டிஜிபி!

அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ஷாக்! நடைபயணத்திற்கு தடை விதித்த டிஜிபி!

பாமக நிறுவனர் ராமதாஸின் புகாரை அடுத்து, அவரது மகன் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

1 Min read
SG Balan
Published : Jul 25 2025, 10:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அன்புமணி நடைபயணம்
Image Credit : google

அன்புமணி நடைபயணம்

அன்புமணி ராமதாஸின் 100 நாள் நடைபயணத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. பாமக நிறுவனரும் அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் அளித்த மனுவை ஏற்று தமிழக காவல்துறை டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

24
உரிமை மீட்க, தலைமுறைக் காக்க
Image Credit : GOOGLE

உரிமை மீட்க, தலைமுறைக் காக்க

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன் அன்புமணி ராமதாஸ், சென்னை அடுத்த திருப்போரூரில் இருந்து "உரிமை மீட்க, தலைமுறைக் காக்க" என்ற தலைப்பில் இன்று மாலை நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

Related Articles

Related image1
அவரை உடனே தடுத்து நிறுத்துங்க! சட்டம் ஒழுங்குக்கே பிரச்சினையாகிடும் - அன்புமணியை எகிறி அடிக்கும் ராமதாஸ்
Related image2
தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! அன்புமணிக்கு வார்னிங் கொடுத்த ராமதாஸ்
34
ராமதாஸ் மனுவும் டிஜிபி உத்தரவும்
Image Credit : Asianet News

ராமதாஸ் மனுவும் டிஜிபி உத்தரவும்

இந்நிலையில், அன்புமணியின் இந்த நடைபயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ், காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அன்புமணியின் நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை அடுத்து, தமிழக டிஜிபி, அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

44
டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கை
Image Credit : our own

டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கை

இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் இந்த நடைபயணத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என டிஜிபி தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராமதாஸின் கடிதம் இல்லாமல் இந்த நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved