MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஹலோ உங்களுக்கு என்ன உதவி வேணும்..? கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்ட துணைமுதல்வர் உதயநிதி

ஹலோ உங்களுக்கு என்ன உதவி வேணும்..? கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்ட துணைமுதல்வர் உதயநிதி

தொடர் கனமழை எதிரொலியாக சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

1 Min read
Velmurugan s
Published : Oct 22 2025, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழகத்தில் வெளுத்துகட்டும் கனமழை
Image Credit : Asianet News

தமிழகத்தில் வெளுத்துகட்டும் கனமழை

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும். 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள அணைக்கட்டுகள், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23
அதிகாரிகளுடன் உதயநிதி ஆய்வு
Image Credit : Asianet News

அதிகாரிகளுடன் உதயநிதி ஆய்வு

இந்நிலையில் சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்யும் வகையில் ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அலைப்புகளையும் எடுத்து துணைமுதல்வர் பொதுமக்களுக்கு பதில் அளித்தார்.

Related Articles

Related image1
கொட்டும் மழை.! கிடு கிடுவென உயர்ந்த நீர்மட்டம்- தமிழக அணைகளில் நீர் இருப்பு என்ன தெரியுமா.?
Related image2
வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் வசூல் மழை! 3 நாள்களில் இத்தனை கோடியா? தலையில் அடித்துக் கொள்ளும் அன்புமணி
33
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த உதயநிதி
Image Credit : Asianet News

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த உதயநிதி

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்களுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை ஆய்வு செய்தோம்.

Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினோம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக
கனமழை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved