MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருப்பரங்குன்றம் வழக்கு: தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் வழக்கு: தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

1 Min read
SG Balan
Published : Jul 24 2025, 10:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திருப்பரங்குன்றம் மலை வழக்கு
Image Credit : our own

திருப்பரங்குன்றம் மலை வழக்கு

திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும், தொல்லியல் துறையின் அனுமதி பெற்ற பிறகே மலை மீது ஏறிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

23
குப்பைகள், ஆக்கிரமிப்புகள்
Image Credit : our own

குப்பைகள், ஆக்கிரமிப்புகள்

மேலும், மலையில் அமைந்துள்ள கோயில்களைப் பாதுகாக்கவும், மலையைச் சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறையிடம் மனு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது புதிய மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Articles

Related image1
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்! சென்னையில் யாத்திரை நடத்துவதா? சாட்டையை சுழற்றிய ஐகோர்ட் அதிரடி முடிவு!
Related image2
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! அதிமுக மாஜி அமைச்சருக்கு செக் வைத்த நீதிமன்றம் - கலக்கத்தில் EPS
33
தொல்லியல் துறைக்கு உத்தரவு
Image Credit : our own

தொல்லியல் துறைக்கு உத்தரவு

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மதுரை
தமிழ்நாடு
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved