MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு

அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு

Rape Case: இளைஞரை காரில் இருந்து இழுத்து போட்டு தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 07 2026, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோவை தனியார் கல்லூரி
Image Credit : Google

கோவை தனியார் கல்லூரி

கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த மாணவி தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் பின்புறத்தில் இருக்கக்கூடிய இடத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

25
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
Image Credit : Asianet News

கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்களை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை காரில் இருந்து இழுத்து போட்டு தாக்கியது மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். பின்னர் கத்தி முனையில் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

Related image1
கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி.. பதறிய சிபிசிஐடி!
Related image2
ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!
35
மாணவி மீட்டு மருத்துவமனையில் அனுமதி
Image Credit : Asianet News

மாணவி மீட்டு மருத்துவமனையில் அனுமதி

அந்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாண நிலையில் கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், படுகாயமடைந்த ஆண் நண்பர் 10 தையல்கள் போடப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

45
குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீஸ்
Image Credit : Asianet News

குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீஸ்

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி மூன்று பேரையும் போலீசார் சுட்டு பிடித்தனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஒரு மாதத்துக்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

55
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Image Credit : Asianet News

நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சுமார் 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கல்லூரி
பெண்கள்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கோயம்புத்தூர்
நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த தேர்தலோடு அதிமுக காலி.! தேர்தலில் மாஸ் காட்டப்போகும் விஜய்.! ஜோதிமணி கருத்தால் திமுக அதிர்ச்சி!
Recommended image2
சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
Recommended image3
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
Related Stories
Recommended image1
கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி.. பதறிய சிபிசிஐடி!
Recommended image2
ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை.! அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved