MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இந்த ஒரே சந்திப்புக்கே பாஜக இப்படி கதறுது! அவங்களுக்கு பொழப்பே இதுதான்! சரவெடியாய் வெடித்த அப்பாவு!

இந்த ஒரே சந்திப்புக்கே பாஜக இப்படி கதறுது! அவங்களுக்கு பொழப்பே இதுதான்! சரவெடியாய் வெடித்த அப்பாவு!

மத்திய அரசுக்கு ஏற்றாற்போல வேஷம் போடுவதாகவும், ஓபிஎஸ் சந்திப்பு பாஜக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தியதாகவும், அதிமுக எம்எல்ஏக்களுடன் பணிபுரிவதால் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுவதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு.

1 Min read
vinoth kumar
Published : Aug 09 2025, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : x/ mk stalin

நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தபோது: பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அரசுக்கு ஏற்றாற்போல வேஷம் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் திமுகவை விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் நடை பயணத்தின் போது ஓபிஎஸ்ஐ சந்தித்தது அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாஜக கூட்டணி கலகலத்து போய்விட்டது. ஒரே ஒரு சந்திப்பையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி அலறி பிரிந்து விட்டது. பாஜக ஒருவரை கூட்டணியில் சேர்க்க முதலில் அவரை அச்சுறுத்த வேண்டும். பின்னால் ஆசை வார்த்தை அவருக்கு கூற வேண்டும். அடுத்ததாக ஓபிஎஸ்-ஐ போல் அவமானப்படுத்த வேண்டும். இடி, ஐடி துணையோடு இவை அனைத்தையும் பாஜக செய்து வருகிறது என விமர்சித்தார்.

24
Image Credit : our own

அதிமுக எம்எல்ஏவிடம் வேலை பார்ப்பதால் தான் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்வதற்கு துணிச்சல் வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி யாருடனும் கூட்டணி தேவையில்லை தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளதே போதும் என செயல்பட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் லட்சம் பேருக்கு மேல் போலி வாக்காளர்கள் சேர்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Articles

Related image1
ஏதோ திமுக மூளையில் உதித்த திட்டம் மாதிரி பேசுறீங்க! நான் கேக்குற கேள்விக்கு தில்லு இருந்தால் பதில் சொல்லுங்க முதல்வரே! L.முருகன்!
Related image2
#BREAKING: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
34
Image Credit : Asianet News

நாடாளுமன்றத்தில் கேள்வியை கேட்கக்கூடாது என ஆளுங்கட்சியினர் கூறி வருகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருவதே இல்லை. தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கிறார். இது போல் போலி வாக்காளர்களை சேர்த்து ஆர்எஸ்எஸ் சரி செய்து வருகிறது.

44
Image Credit : ANI

வட மாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டும் என எந்த இடத்தில் முதல்வர் சொல்லவே இல்லை. ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் தான் இருப்பிட சான்றிதழ் பெற முடியும். ஆனால் அதை எல்லாம் மறுதலித்து விட்டு மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ் ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையில் தமிழகம் எப்போதும் உறுதியாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாடகமும் நடிப்பும் தமிழக அரசுக்கு தேவையில்லை என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
திமுக
பிஜேபி
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved