MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 100 சவரன் நகை! 37 லட்சத்தில் சொகுசு கார்! திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி! யார் இந்த கவிதா?

100 சவரன் நகை! 37 லட்சத்தில் சொகுசு கார்! திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி! யார் இந்த கவிதா?

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கவிதா, திருமணமான சில மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்தார். வரதட்சணை கொடுமை மற்றும் சந்தேகத்திற்குரிய காயங்கள் குறித்து பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

2 Min read
vinoth kumar
Published : Jul 09 2025, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Google

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரதசட்ணை கொடுமையால் அடுத்தடுத்து பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் திருப்பூரில் ரிதன்யா (27) என்பவர் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்த நிலையில் வரதசட்ணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் லோகேஸ்வரி என்பவர் திருமணமான 4 நாட்களிலேயே வரதசட்ணை டார்ச்சரால் விபரீத முடிவு எடுத்தார். இந்நிலையில் தமிழகத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

26
Image Credit : Google

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி வேல்விழி. இவரது மகள் கவிதா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். ஆன்மீகச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுபேத்தி ஆவார். இந்நிலையில் கவிதாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான ஓம் கணபதியின் மகன் நாகார்ஜுன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. நாகர்ஜூன் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் மனைவியை அழைத்து செல்லாமல் சென்னையில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
ரிதன்யா கணவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைகள்! 300 பவுன் நகைகள், வால்வோ கார்! வைரலாகும் போட்டோஸ்!
Related image2
நேற்று திருப்பூர்! இன்று திருவள்ளூர்! திருமணமான 4 நாட்களில் அதுவும் ஒரு சவரன் நகைக்காக இப்படியா?
36
Image Credit : stockPhoto

திருமணத்தின் போது வரதட்சணையாக 100 சவரனும், மாப்பிள்ளைக்கு 13 சவரன் நகையும், வைர மோதிரம், 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், இரண்டரை லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை ராணுவத்தில் இருந்து திரும்பியதும் சென்னையில் மருத்துவமனை கட்டி மருத்துவ தொழில் செய்யப்போவதாகவும் கூறிவந்தனர். கடந்த ஜூன் 10ம் தேதி அன்று மணமக்கள் ஜபல்பூர்க்குச் சென்றுள்ளனர்.

46
Image Credit : Google

அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மாமனார் கவிதாவின் தந்தையை தொடர்பு கொண்டு உங்களுடைய மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக தனது மகன் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து கவிதாவின் பெற்றோர்கள் விமானம் மூலம் பெங்களூருவுக்கு சென்ற அங்கு ஏற்கனவே காத்திருந்த சம்மந்தி ஓம் கணபதியுடன் ஜபல்பூர் ராணுவ மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது எவ்வித அசைவின்றி இருந்துள்ளார். சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

56
Image Credit : stockPhoto

பின்னர் ஜூன் 11ம் தேதி ஜபல்பூர் ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து கவிதாவின் உடலை மாப்பிள்ளை வீட்டார் சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கவிதாவின் உடலை திண்டுக்கல்லில் உள்ள உங்கள் வீட்டிற்கு கொண்ட செல்லவில்லையா என்று தட்சணாமூர்த்தி கேட்டுள்ளார். அப்போது உங்கள் மகளை நீங்களே நல்லடக்கம் செய்யுங்கள் நாங்கள் விட்டு தருகிறோம் என கூறியுள்ளனர்.

66
Image Credit : our own

பின்னர் பெண்ணின் பெற்றோர் மகளின் உடலை சென்னைக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர். மாப்பிள்ளை நாகார்ஜுன் அவரது குடும்பத்தினரும் கவிதா வீட்டிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் மாப்பிள்ளையின் நடத்தையில் பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜபல்பூர் காவல்நிலையத்திலும், சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திலும் கவிதாவின் தந்தை புகார் அளித்திருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதாவுக்கு தலையில் இரண்டு இடங்களில் பலத்த காயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த காயம் அவர் மயங்கி கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் என கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மயங்கி விழுந்தால் ஒன்று பின் மண்டையில் அடிபடும் அல்லது உட்பக்க மணடடையில் அடிபடும் அது எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் அடிப்பட்டது என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். பெண் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனை கட்ட இடம் வாங்கி தர சொல்லி வற்புத்திதாகவும் அது தரவில்லை என்பதனால் தனது மகளை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, கடைசியில் கொலையே செய்துவிட்டதாக கவிதாவின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
தமிழ்நாடு
சென்னை
காவல்
திருமணம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved