- Home
- Tamil Nadu News
- ரிதன்யா கணவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைகள்! 300 பவுன் நகைகள், வால்வோ கார்! வைரலாகும் போட்டோஸ்!
ரிதன்யா கணவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணைகள்! 300 பவுன் நகைகள், வால்வோ கார்! வைரலாகும் போட்டோஸ்!
திருப்பூரில் திருமணமாகி 78 நாட்களில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கவின் குமார்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 500 சவரன் வரதட்சணை தருவதாக கூறியுள்ளனர். முதற்கட்டமாக 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்தனர்.
அன்று முதலே தனது கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக தந்தையிடம் அவர் அடிக்கடி முறையிட்ட போதும், சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் கவலைப்படாதே என்று சமாதானப்படுத்தினர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரிதன்யா கடந்த 28ம் தேதி தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை சாப்பிட்டு காரிலேயே தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி 78 நாட்களிலேயே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரிதன்யா விஷ மாத்திரையை உட்கொள்வதற்கு முன்பாக தனது தந்தையின் வாட்ஸ் அஃப் எண்ணிற்கு உருக்கமாக ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் என்னோட முடிவுக்கு என்னுடைய திருமண வாழ்க்கைத்தான் காரணம். போதும் இந்த லைஃப் எனக்கு வேண்டாம். என்னோட இந்த முடிவிற்கு கவின், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி தான் காரணம் என கூறியிருந்தார். திருமணம் ஆகி 78 நாட்களிலேயே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி உடல்நிலை காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் வீட்டு காவலில் இருந்து வந்தார். வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதால் சித்ராதேவியை கைது செய்யவில்லை என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், மாமியார் சித்ராதேவி நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ரிதன்யா திருமணத்தின்போது அவருக்கு கொடுக்கப்பட்ட 300 சவரன் நகை, ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வால்வோ காரில் அவர் சிரித்தபடி மகிழ்ச்சியாக பயணிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு முன்னதாக தனது தாய், தந்தை குடும்பத்தினருடன் ரிதன்யா எடுத்த புகைப்படம் மற்றும் திருமணத்திற்கு பிறகு மாமனார், மாமியாருடன் கோவிலில் எடுத்துக்கொண்ட போட்டோஸ்.
ரிதன்யா திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகள், புகைப்படங்கள் மற்றும் வால்வோ காரில் கவின்குமார் மகிழ்ச்சியாக பயணிக்கும் புகைப்படங்கள்.