MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கிய தமிழக அரசு! நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கிய தமிழக அரசு! நடந்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Nov 19 2025, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி திரு​வேங்​கடம் மட்டும் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார். மேலும் சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், ஏ1 குற்றவாளியாக நாகேந்திரனும், ஏ2-வாக அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.

25
Image Credit : our own

இதனிடையே இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கடந்த மாதம் 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று கூறியது.

Related Articles

Related image1
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
Related image2
குமரி டூ டெல்டா மாவட்டம்! சக்கை போடு போடப்போகுதாம் மழை! வானிலை மையம் சொன்ன அப்டேட்!
35
Image Credit : Google

இதனைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தது. அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை காவல்துறை தயாரித்துள்ளது. சிபிஐ விசாரணை என்பது காவல்துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தது.

45
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என இந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அஸ்வத்தாமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தன்னை இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

55
Image Credit : Asianet News

இந்நிலையில் இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ..! கோவை மண்ணில் தெறிக்க விட்ட பிரதமர் மோடி!
Recommended image2
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
Recommended image3
9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000! கோவையில் ரூ.18,000 கோடியை வாரி வழங்கிய பிரதமர் மோடி!
Related Stories
Recommended image1
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
Recommended image2
குமரி டூ டெல்டா மாவட்டம்! சக்கை போடு போடப்போகுதாம் மழை! வானிலை மையம் சொன்ன அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved