MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?

கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?

செங்கல்பட்டு அருகே, செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதால் சந்தேகமடைந்த கணவன், காதல் மனைவியை மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்புதான் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

1 Min read
vinoth kumar
Published : Nov 19 2025, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : Asianet News

காதல் திருமணம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண் (24). கூலி தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த மதுமிதாவுக்கும்(19) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மதுராந்தகம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

24
 அடிக்கடி ஆண் நண்பருடன் பேசிய மதுமிதா
Image Credit : our own

அடிக்கடி ஆண் நண்பருடன் பேசிய மதுமிதா

இந்நிலையில், மதுமிதா அடிக்கடி ஆண் நண்பருடன் தனது செல்போனில் பேசி வந்துள்ளார். இது சரணுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக காதல் மனைவியை சரண் பலமுறை கண்டித்துள்ளார். மேலும் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் யாருடன் பேசுகிறாய் என்ற கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Related Articles

Related image1
குமரி டூ டெல்டா மாவட்டம்! சக்கை போடு போடப்போகுதாம் மழை! வானிலை மையம் சொன்ன அப்டேட்!
Related image2
கோவை திமுக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி! என்ன காரணம்?
34
மனைவி மீது சந்தேகத்தால் கொலை
Image Credit : Asianet News

மனைவி மீது சந்தேகத்தால் கொலை

இந்நிலையில், நேற்று மாலையில் மதுமிதாவை சமாதானப்படுத்துவது போல் நடித்து அச்சிறுபாக்கம் அடுத்த சென்னேரி பகுதியில் உள்ள மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்தபோது இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

44
காதல் கணவன் கைது
Image Credit : Asianet News

காதல் கணவன் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சரணை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேறு ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் சந்தேகத்தில் காதல் மனைவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை
திருமணம்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆஸ்திரேலியாவில் BMW காரால் அதிர்ச்சி..! உருக்குலைந்து போன 8 மாத கர்ப்பிணியான இந்திய ஐடி பெண் குடும்பம்..!
Recommended image2
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
Recommended image3
வயலில் வைத்து சில்மிஷம்.. முத்தமிட முயன்றவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய பெண்!
Related Stories
Recommended image1
குமரி டூ டெல்டா மாவட்டம்! சக்கை போடு போடப்போகுதாம் மழை! வானிலை மையம் சொன்ன அப்டேட்!
Recommended image2
கோவை திமுக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved