MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற காவிரி ஆணையம்! 13.78 TMC நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற காவிரி ஆணையம்! 13.78 TMC நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டத்தில், நவம்பர் மாதத்திற்கு 13.78 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. திறக்கப்படும் நீரின் அளவைக் கண்காணிக்க தமிழக அரசு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

1 Min read
SG Balan
Published : Nov 06 2025, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காவிரி மேலாண்மை ஆணையம்
Image Credit : our own

காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 45-வது கலந்தாய்வுக் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இன்று (நவம்பர் 6, 2025) டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு நவம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 13.78 டி.எம்.சி. நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஆணையம் திட்டவட்டமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

24
அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு?
Image Credit : our own

அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு?

கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்ட அதிகாரி, தற்போதைய நீர் இருப்பு நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மேட்டூர் அணை நீர் இருப்பு (05.11.2025): 89.741 டி.எம்.சி. ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,401 கன அடியாக உள்ளது. விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக அணையிலிருந்து திறக்கப்படும் வினாடிக்கு 18,427 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், நீர் வரத்தும் கணிசமான அளவில் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Related image1
Now Playing
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.....சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !
Related image2
ராணியின் 400 ஆண்டு கால சாபம்! காவிரி கரையில் இருந்தும் பாலைவனமான கிராமம்! இந்த கதை தெரியுமா?
34
கர்நாடகாவுக்கு ஆணையம் பிறப்பித்த உத்தரவு
Image Credit : Asianet News

கர்நாடகாவுக்கு ஆணையம் பிறப்பித்த உத்தரவு

தமிழ்நாடு அதிகாரி தனது வாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கர்நாடகம் 2025, நவம்பர் மாதத்திற்குத் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 13.78 டி.எம்.சி. நீரினை பிலிகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் கோரிக்கையை ஆணையம் விரிவாகப் பரிசீலித்தது. அதன் முடிவில், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார், கர்நாடக அரசு 13.78 டி.எம்.சி. நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.

44
சிறப்புப் பொறியாளர் குழு கண்காணிப்பு
Image Credit : our own

சிறப்புப் பொறியாளர் குழு கண்காணிப்பு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிலிகுண்டுலு பகுதியில் கர்நாடகா விடுவிக்கும் நீரின் அளவை உன்னிப்பாகக் கண்காணிக்க சிறப்புப் பொறியாளர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஆணையத்தின் உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
கர்நாடகா
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved