MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நள்ளிரவில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் திடீரென புகுந்த போலீஸ்.! அதிர்ச்சியில் தவெக

நள்ளிரவில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் திடீரென புகுந்த போலீஸ்.! அதிர்ச்சியில் தவெக

தவெக தலைவர் விஜய் வீட்டில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தினர். கரூர் சம்பவத்திற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் இந்த நிகழ்வு தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : Oct 09 2025, 08:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மக்களை சந்திக்க தொகுதி தொகுதியாக அரசியல் கட்சியினர் களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையில் கலக்கி வந்த விஜய், திமுகவை வீழ்த்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கினார்.

 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு பிரம்மாண்ட மாநில மாநாட்டை நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

24
Image Credit : Instagram

இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டமாக பொதுமக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்ட அவர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சார பயணத்தை முடித்தார். அடுத்ததாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அளவுக்கதிகமான கூட்டம் காரணமாக கரூரில் 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

 இதனையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைது செய்ய போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். எந்த நேரமும் போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
விஜய் உடன் கூட்டணி..! சஸ்பென்ஸ் உடைத்த இபிஎஸ்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு.. கெத்து காட்டும் பழனிசாமி
Related image2
பல கால்களைப் பிடித்த பழனிசாமி.. இப்ப மோடி காலில் டோட்டல் சரண்டர்! கிழித்து தொங்க விட்ட உதயநிதி!
34
Image Credit : our own

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் நேற்று நள்ளிரவு போலீசார் உள்ளே புகுந்து சோதனை மேற்கொண்டது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நள்ளிரவு 1.50 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனையடுத்து அலர்ட் செய்யப்பட்ட போலீசார் சுமார் அரை மணி நேரம் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எந்த வித சந்தேகத்திற்கும் இடமான பொருட்கள் கிடைக்கவில்லை.

44
Image Credit : Asianet News

இதனயைடுத்து அந்த மிரட்டல் போன் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவம் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர் ஒருவர் விஜய்யின் பின் பக்க வழியாக உள்ளே சென்று மாடியில் பதுங்கி இருந்துள்ளார். அவரை விஜய் கண்டுபிடித்த போலீசாரஇடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
அரசியல்
tvk நெரிசல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved