MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையை சத்தம் இல்லாமல் கலக்கி வந்த ரவுடி சுட்டுக் கொலை; பின்னணி என்ன?

சென்னையை சத்தம் இல்லாமல் கலக்கி வந்த ரவுடி சுட்டுக் கொலை; பின்னணி என்ன?

வட சென்னையின் முக்கிய அரசியல் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர் திருப்பங்கள். பல கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

3 Min read
Author : Ajmal Khan
| Updated : Sep 23 2024, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Armstrong

Armstrong

ஆம்ஸ்ட்ராங் கொலை

வட சென்னையில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங்க, தேசிய கட்சியான பகுஜன் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது புதிய வீட்டை பார்க்க சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தததாக தகவல் வெளியானது. ஆனால் இந்த கொலையில் பின்னனியில் வேறு யாரோ ஒருவர் இருப்பதாக புகார் கூறப்பட்டது. கைது செய்யப்படவர்கள் கூலிப்படையினர் மட்டுமே என தெரிவிக்கப்பட்டது.

26

கொலைக்கான காரணம் என்ன.?

இதனையடுத்து  ஆம்ஸ்டாங்கை முதலில் வெட்டிய திருவேங்கடம் என்ற ரவுடியை விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்ப ஓட முன்றதாக கூறி போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகள் கொலைக்கான பின்னனியை கூறினர். இதனையடுத்து தொடர் விசாரணையில் பல திடீர் திருப்பங்கள் வெளிவந்தது. அதன் படி அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் என பல கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில் பல கட்டப்பஞ்சாயத்தால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியானது. அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் இடையே ஏற்பட்ட மோதாலாலும் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக கூறப்பட்டது.

36
Armstrong

Armstrong

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர்

மேலும் நிலப்பிரச்சனை, ஸ்கிராப் பிஸ்னஸ் என பல வகையிலும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிராக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சம்போ செந்தில் மற்றும் சீசீங் ராஜா, மொட்டை கிருஷ்ணன் பெயர்கள் கூறப்பட்டது இவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த வாரம் காக்க தோப்பு பாலாஜி பிடிபட்டார். அப்போது அவரை கைது செய்ய போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரை தப்பி சென்ற போது என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

46

சீசிங் ராஜா கைது

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யபட்ட 29வது குற்றவாளியாவார். இதனையடுத்து சீசிங் ராஜாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது நீலாங்கரையை அடுத்த அக்கறை பகுதியில் உள்ள எஸ்கான் கோயில் பகுதியில் சீசிங் ராஜா மறைத்து வைத்த ஆயுதங்களை எடுக்க போலீசார் அவரை அழைத்து சென்றதாகவும், அப்போது அந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்றதாக கூறப்படுகிறது இதனையடுத்து ரவுடி சீசிங்கு ராஜாவை போலீசாரின் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்துள்ளனர்.

56

என்கவுண்டரில் சுட்டுக்கொலை

இதனையடுத்து  போலீசார்  துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் போது சீசிங்கு ராஜா உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யார் இந்த சீசிங் ராஜா என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கூட்டாளியாக கருதப்படுபவர் சீசிங் ராஜா இவர் மீது 5  கொலை வழக்குகளும், கட்டப்பஞ்சாயத்து வழக்குகளும் உள்ளது. 

66
crime news alwar

crime news alwar

யார் இந்த சீசிங் ராஜா

செங்கல்பட்டை சேர்ந்த ராஜா, ஆரம்பத்தில் வழிப்பறி குற்றவாளியாக சின்ன, சின்ன குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்துவது என தொடர்ந்து வந்தவர்,  படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளி லிஸ்டில் இணைந்தார்.  தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது. சீசிங் ராஜா மீது  33 வழக்குகள் நிலுவையில் உள்ளது.  ஏற்கனவே சீசிங்  ராஜா மீது 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved