MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீங்க ஒன்னும் குற்றவாளி இல்ல! எதுக்கு வழக்கை கண்டு அஞ்சுறீங்க! கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!

நீங்க ஒன்னும் குற்றவாளி இல்ல! எதுக்கு வழக்கை கண்டு அஞ்சுறீங்க! கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!

2021 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி.

1 Min read
vinoth kumar
Published : Nov 15 2025, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
Image Credit : Asianet News

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தேர்தலின் போது வீரமணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.

24
சென்னை உயர்நீதிமன்றம்
Image Credit : Asianet News

சென்னை உயர்நீதிமன்றம்

அதனடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தாம் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

Related image1
மொபைல்ல சார்ஜ் ரெடியா போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை!
Related image2
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஓவைசி..! 15 தொகுதிகளில் காங்கிரஸ் ஆல் தோற்றோம் என கொக்கரிப்பு!
34
பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல்கள்
Image Credit : our own

பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல்கள்

இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர், வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தகவலில் இருந்து ரூ.14.30 கோடி வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிகக்கப்பட்டதால் அது தொடர்பாக மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

44
உச்சநீதிமன்றம் தள்ளுபடி
Image Credit : Google

உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீங்கள் ஒன்றும் குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் வழக்கை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
உச்ச நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
தேர்வு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved