பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்.! நானே தலைவர் - ராமதாஸ் அதிரடி
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை வழிநடத்தவே இந்த முடிவு என்றும், கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Ramadoss Anbumani clash : தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் பாமக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் தருமபுரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
இந்த நிலையில் பாமக நிறுவனராக உள்ள ராமதாசுக்கும், தலைவராக உள்ள அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்யப்பட்டப்போது பகிரங்கமாக வெளிப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதான உடன்பாடு ஏற்பட்டது.
Breaking News | நானே பாமக தலைவர் - தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு !
anbumani ramadoss
ராமதாஸ்- அன்புமணி மோதல்
இந்த சூழ்நிலையில் மீண்டும் தந்தை மகன் இடையே மோதல் உருவாகியுள்ளது. திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு நான் தான் தலைவராக இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார்.எனவும் பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என கூறினார்.
ramadoss
பதவி ஆசை இருந்ததில்லை
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி ஆசை எனக்கு இருந்ததில்லை என தெரிவித்தார். மேலும் கூட்டணி குறித்த விஷயங்களுக்கு நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம் எனவும். அன்புமணி நீக்கம் செய்யப்படதற்கான காரணங்கள் பின்னர் தெரிவிப்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.