MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..! சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராகும் அன்புமணி: தொண்டர்களுக்கு அழைப்பு

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..! சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தயாராகும் அன்புமணி: தொண்டர்களுக்கு அழைப்பு

மாவட்ட வாரியாக உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அடுத்த 2 மாதங்களில் சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Sep 11 2025, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அன்புமணியின் உரிமை மீட்பு பயணம்
Image Credit : Asianet News

அன்புமணியின் உரிமை மீட்பு பயணம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற பெயரில் 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்புமணி முந்திரி, பலா விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

23
தங்கு தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்
Image Credit : x/anbumani

தங்கு தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்

இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான போதைப் பொருட்களும் தற்போது தமிழகத்தில் கிடைக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக முந்திரி விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. முக்கனிகளில் ஒன்றான பலாவும் கடலூர் மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. முந்திரி, பலா போன்ற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய முடியும். அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

விவசாய நிகலங்களை அழித்து அவற்றில் இருந்து பழுப்பு நிலக்கரி எடுப்பது நியாயமா? பழுப்பு நிலக்கரியை எரித்து அவற்றில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறையை பின்பற்றுகின்றனர். உலகம் அறிவியலில் தற்போது எவ்வளவோ முன்னோக்கி சென்றுவிட்டது. பல முறைகளில் மின்சாரத்தை எடுக்க முடியும்.

Related Articles

Related image1
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்.? இறங்கி அடிக்க தயாராகும் ராமதாஸ்
Related image2
புதிதாக 100 ரெஸ்டோ பார்களா.!! உடனே மூடுங்க.. மதுவிலக்கை அமல்படுத்துங்க- சீறும் அன்புமணி
33
சிறை நிரப்பும் போராட்டம்
Image Credit : x/anbumani

சிறை நிரப்பும் போராட்டம்

பாமக தொடர்ந்து வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி வருகிறது. நாங்கள் கோரும் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைத்து சமூகத்தினரும் பயன் பெற தான். 15 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அடுத்த 2 மாதத்தில் சிறை நிறப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் குறைந்தது 5 லட்சம் வன்னியர்கள் கலந்து கொள்ள வேண்டும். அறவழியில் இந்த போராட்டம் நடைபெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved