அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் நடிகை? யார் இவர் தெரியுமா?
6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி மற்றும் நடிகையை மாநிலங்களவை எம்.பி.யாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும். இந்நிலையில் 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியுடன் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. அதில் திமுக சார்பில் எம்.பி. வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா பதவிக்காலமும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
AIADMK
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால் தற்போது 134 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுகவுக்கு ஒருவர் உறுதி. அதே சமயத்தில் பாமக அல்லது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
இதையும் படிங்க: டேய் மடையா பேசுறத கேளுடா! மேடையில் டென்ஷனாகி தொண்டரை ஒருமையில் திட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
AIADMK Rajya Sabha MP
இதனால் இப்போதே திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணி சார்பில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது பாஜக கூட்டணியில் இருப்பதால் அவருக்கு பதிலாக அதிமுகவை சேர்ந்தவரே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார். அது யார் என்பது இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் நடிகையுமான விந்தியாவை மாநிலங்களவை எம்.பி. தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Actress Vindhya
யார் இந்த விந்தியா?
ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில் அதிமுகவின் அதிரடி சரவெடி பேச்சாளராக இருந்தவர் விந்தியா. அவர் ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுகவில் இணைந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் டைமிங், ரைமிங் என்று பேசி மக்களை ஈர்க்கும்படி பேசி அசத்தினார். ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி சொல்வார்.
இதையும் படிங்க: அதிமுகவை கை விட்ட விஜய்.! பாஜகவிற்கு ஓகே சொன்ன எடப்பாடி.? பரபரபக்கும் அரசியல் களம்
edappadi palanisamy
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ பேர் கட்சியில் இருந்து பிரிந்து போய் விட்டனர். பலர் கட்சி மாறி விட்டனர். ஆனால், விந்தியா இப்போதும் அதிமுகவில் நீடிக்கிறார். எப்போது பிரசாரம் என்றாலும் சமாதிக்கு போய் ஜெயலலிதாவின் ஆசியை பெற்றுக்கொண்டு களத்தில் இறங்குவது இவரது வாடிக்கை. மேலும் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் தீவிர ஆதரவாளராக அறியப்படும் விந்தியாவை கவுரவிக்கும் வகையில் அதிமுகவில் மாநிலங்களவை பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.