MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கு! தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்ட முக்கிய செய்தி!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு! தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்ட முக்கிய செய்தி!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 25ம் தேதியுடன் முடிவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17 வரை நடைபெற்று, மே 5ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

2 Min read
vinoth kumar
Published : Mar 26 2025, 07:50 AM IST| Updated : Mar 26 2025, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu public exam

Tamilnadu public exam

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர். இவர்களுக்கான தேர்வு பணிகளை கண்காணிக்க 4 470 பறக்கும் படைகளும் 43,446 தேர்வு கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர். 

25
School Student

School Student

இந்த சூழலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் அதாவது மார்ச் 25ம் தேதி வரை முடிவடைந்தது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு பள்ளித் தேர்வு இறுதி நாள்! கண்டிப்பா இதை செய்யணும்! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

35
12th public exam

12th public exam

அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி நாளை அதாவது 27ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதி உள்ளனர். 

45
11th public exam

11th public exam

10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்ர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். 

55
Directorate of Government Examinations

Directorate of Government Examinations

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வருகிற மே மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved