- Home
- Tamil Nadu News
- சேலம்
- அலறிய சேலம் பேருந்து நிலையம்! கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து! நடந்தது என்ன?
அலறிய சேலம் பேருந்து நிலையம்! கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து! நடந்தது என்ன?
College Student: சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை மறுத்ததால் காதலன் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

instagram love
இன்ஸ்டாகிராம் காதல்
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சூர்யா (22). இவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடிவரும் வீரபாண்யைச் சேர்ந்த மோகன பிரியன் (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர்.
College student
கல்லூரி மாணவி
இருவரும் நேரில் பார்க்க முடிவு செய்தனர். இதனால் கல்லூரி மாணவி காதலை கைவிட நினைத்துள்ளார். மேலும் வீட்டில் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்ததால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்ய கல்லூரி மாணவி முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கோடை மழை! மின்சாரம் துண்டிப்பு! அதுமட்டுமல்ல விமான சேவை பாதிப்பு!
salem bus stand
கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி
இந்நிலையில் இன்று சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவியுடன் மோகனபிரியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவி உன்னை காதலிக்க முடியாது திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன பிரியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியை குத்திவிட்டு தானும் அதே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சி! வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
Police investigation
போலீஸ் விசாரணை
இதனால் சேலம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.