MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சி! வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சி! வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விமான பணிப்பெண் வெண்டிலேட்டரில் இருந்தபோது பாலியல் தொல்லை. 

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 16 2025, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gurugram hospital

Gurugram hospital

குருகிராமில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 46 வயதான விமான பணிப்பெண் வெண்டிலேட்டரில் இருக்கும்போது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

24
Air hostess

Air hostess

விமான பணிப்பெண் தனியார் மருத்துவமனை

டெல்லி குருகிராமில் கடந்த 5ம் தேதி 46 வயதான பெண் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திய போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு  அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 7ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கணவரிடம் கூறியபடி கதறி அழுதுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

34
Air hostess on ventilator in Gurugram hospital

Air hostess on ventilator in Gurugram hospital

வெண்டிலேட்டரில் இருக்கும் போது பாலியல் சீண்டல்

அதில், சிகிச்சையின் போது தான் வென்டிலேட்டரில் இருந்தேன். அப்போது மருத்துவமனையின் சில ஊழியர்கள் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், வென்டிலேட்டரில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. மேலும் இரண்டு செவிலியர்களும் என்னைச்  சுற்றி இருந்தனர் என்று தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 

44
CCTV Camera

CCTV Camera

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

மேலும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Recommended image2
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Recommended image3
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved