MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் நிலை என்ன? அந்த 3 பேர் யார்? கோவை ஆணையர் பரபரப்பு தகவல்

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் நிலை என்ன? அந்த 3 பேர் யார்? கோவை ஆணையர் பரபரப்பு தகவல்

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் 7 தனிப்படைகள் தேடி வந்தன. இந்நிலையில், வெள்ளகிணறு பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். 

2 Min read
vinoth kumar
Published : Nov 04 2025, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்று கிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

24
Image Credit : Asianet News

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

Related Articles

Related image1
அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?
Related image2
நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
34
Image Credit : Asianet News

இந்நிலையில் கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்து வருகிறார். சுட்டுபிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மூன்று பேரும் கல்லைக் கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம் பெண்ணை தூக்கி சென்றனர். கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம் பெண்ணை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிடிப்பட்ட மூவரில் காளிஸ்வரன், கருப்புசாமி இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளி என தெரியவந்துள்ளது.

44
Image Credit : Asianet News

சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் மூன்று பேரும் சிக்கி உள்ளனர். பிருந்தாவன நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணியில் சென்று அதன் பின்னர் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 10:30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. குணா(30), சதீஷ்(20), கார்த்திக்(21) ஆகிய மூன்று பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பிடிப்பட்ட மூன்று பேரும் கூலிப்படையில் தொடர்புடைய நபர்களாக தெரியவில்லை. விசாரணைக்கு பின் தெரிய வர வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் அவருக்கு மனநல கவுன்சிலின் தரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved