MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?

அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் காவலரைத் தாக்கியதால் மூவரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

2 Min read
vinoth kumar
Published : Nov 04 2025, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 கோவை கல்லூரி மாணவி
Image Credit : Getty

கோவை கல்லூரி மாணவி

கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்று கிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அந்த ஆண்பரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டி விட்டு அந்த கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் ஆண் நண்பரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் காவல் ஒன்று இருக்கிறதா என்று அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்று அதிமுக, தவெக, உள்ளிட்ட கட்சிகள் கோவையில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

25
பட்டத்தரசி அம்மன் கோவில் பதுங்கி இருந்த குற்றவாளி
Image Credit : Asianet News

பட்டத்தரசி அம்மன் கோவில் பதுங்கி இருந்த குற்றவாளி

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

Related Articles

Related image1
எதிர்பாராத ட்விஸ்ட்! தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ! வானிலை மையம் எச்சரிக்கை!
Related image2
நான்கு நாட்களாக ஒரே ரூமில் புருஷன், மனைவி, கள்ளக்காதலன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி! சிக்கிய கடிதம்!
35
சுட்டு பிடித்த போலீஸ்
Image Credit : Asianet News

சுட்டு பிடித்த போலீஸ்

தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடும் போது மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும், குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்த்து.

45
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
Image Credit : our own

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

குற்றவாளிகள் மூன்று பேர் காலிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் அவர்கள் கீழே விழுந்து வலியால் துடித்தனர். பின்னர் மூன்று பேரும் குண்டு காயத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

55
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Image Credit : our own

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரும் நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved