MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • 'குளு குளு' பெங்களூரு போல் மாறும் சென்னை! 3 மாசம் கருணை காட்டிய வெயில்! ஜில் நியூஸ்!

'குளு குளு' பெங்களூரு போல் மாறும் சென்னை! 3 மாசம் கருணை காட்டிய வெயில்! ஜில் நியூஸ்!

சென்னையில் கடந்த 3 மாதங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியசை தாண்டவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min read
Rayar r
Published : Jun 01 2025, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai Temperatures Dropped Last 3 months
Image Credit : our own

Chennai Temperatures Dropped Last 3 months

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. 

இந்த வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

24
சென்னையில் குறைந்தது வெயில்
Image Credit : our own

சென்னையில் குறைந்தது வெயில்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா, சென்னையில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். 

அதாவது மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களில் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டவில்லை. பொதுவாக கோடை காலங்களில் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி விடும்.

Related Articles

Related image1
6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த அலர்ட்! சென்னையை குளிர்வித்த திடீர் மழை!
Related image2
மழைக்கு டைம் குறித்த வானிலை மையம்! சற்று நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம்!
34
சென்னையில் 40 டிகிரி செல்சியசை தொடாத வெயில்
Image Credit : Freepik

சென்னையில் 40 டிகிரி செல்சியசை தொடாத வெயில்

ஆனால் இந்த ஆண்டு கோடையில் சென்னையில் மே 4 மற்றும் 5ம் தேதிகளில் மட்டும் வெயில் 39.6 டிகிரி செல்சியஸை தொட்டிருந்தது. மற்ற நாட்களில் வெயிலின் தாக்கம் இதைவிட குறைவாக இருந்தது என்று தென் மண்டலத் தலைவர் அமுதா கூறியுள்ளார். 

சென்னையில் வெயில் குறைவாக பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் வெயில் கருணை காட்டினாலும் மற்ற இடங்களில் வெளுத்து வாங்கியுள்ளது.

44
 அதிக வெயில் பதிவானது எங்கே?
Image Credit : Instagram

அதிக வெயில் பதிவானது எங்கே?

அதாவது ஈரோட்டில் மே 15ம் தேதி 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூரில் மே 4 மற்றும் 7 தேதிகளில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியுள்ளது. மதுரையிலும் மே 13, 14 தேதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது. 

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அந்த அளவுக்கு இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
வெப்ப அலை
மழை செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved