- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Chennai News: தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தொழிலதிபர் மனைவி
சென்னை வேப்பேரி பகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் திலிப் என்ற வாலிபர் குடியேறினார். இவர் தொழிலதிபரின் மனைவியோடு ஆரம்பத்தில் அன்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கள்ளக்காதல் மோகம்
அடிக்கடி தனிமையில் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் திலிப் கேட்கும் போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கிலோ அளவுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளையும், 2.5 கிலோ எடை உள்ள வெள்ளி பொருட்களையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொழிலதிபர் மனைவி திலிப்புடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
ஆபாச படங்கள் காட்டி மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த திலிப் தொழிலதிபர் மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது தன்னுடன் கள்ளத்தொடர்பை நீடிக்கவில்லை என்றால் தன்னுடன் நெருங்கி இருக்கும் ஆபாச படங்கள் என்னிடம் இருக்கிறது.
காவல் நிலையத்தில் புகார்
அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி என்ன செய்வது என்றால் இருந்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் வேறு வழியின்றி தொழிலதிபரின் மனைவி வேப்பேரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் திலிப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் தொழில் அதிபர் மனைவியிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

